கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை (சூன் 2) ஒட்டி கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விசய், உலகு தழுவிய தமிழ்க் குறும்பா நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்.
இந்தப் போட்டிக்கு 2018, 2019, 2020 – ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான உங்களுடைய நூல்களின் 3 படிகளை வரும் மே-20-க்குள் அவர்களுக்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
தேவைக்கேற்ப அச்சு(POD) எனப்படும் ஒளிப்படி நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டியில் ஏற்கப்பட மாட்டா.
ஒரு கவிஞரே எத்தனை நூல்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம்.
முதல் பரிசு உரூ. 10 ஆயிரம் – இரண்டாம் பரிசு உரூ. 5 ஆயிரம் – மூன்றாம் பரிசு உரூ. 3 ஆயிரம் – நான்கு நூல்களுக்கு ஆறுதல் பரிசு உ ரூ.1000 வீதம்.
ஆரணியில் வரும் சூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவி.விசய்-யின் குறும்பா நூல்கள் வெளியீட்டு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.
தமிழகத்தின் மூத்த குறும்பா கவிஞர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்வர்.
கூடுதல் விவரங்களைப் பெற அழையுங்கள் : 96004 56606
வெளியீடு- http://thiru2050.blogspot.com/2021/04/2021.html
No comments:
Post a Comment